Wednesday, September 24, 2025
Homeஇந்தியாஇந்தியாவில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறிய தொழிலாளி உயிரிழப்பு

இந்தியாவில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறிய தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே பாருடக்கா பகுதியை சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா (வயது 52), தொழிலாளி. இவர் சாலையோர உணவகத்தில் ஆம்லேட் உடன் வாழைப்பழத்தை முழுமையாக சாப்பிட்டு உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காசர்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி விஷாந்த் டிசோசா இறந்தார். அவரது தொண்டையில் ஆம்லேட், வாழைப்பழம் சிக்கியதால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெந்தியடக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!