இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் ராஜஸ்தானில் விழுத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் குறித்த போர் விமானம் விழுந்துள்ளது. விமானம் வழக்கமான பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளான மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமானப்படை நிலையம் அருகே வழக்கமான பயிற்சியின போது போர் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இரண்டு விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார்.மார்ச் மாதம் 7 ஆம் திகதி ஹரியானாவில் மற் றுமொரு போர் விமானம்விபத்துக்குள்ளானது, ஆனால் அந்த விபத்தில் விமானி உயிர் தப்பினார்.