Home » இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து அறிக்கை வெளியிட்ட சபாநாயகர்

இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து அறிக்கை வெளியிட்ட சபாநாயகர்

by newsteam
0 comments
இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து அறிக்கை வெளியிட்ட சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதித் தவிசாளரான ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் விஜித ஹேரத் மற்றும் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!