Home » சட்டவிரோத மதுபானத்துடன் சீன நாட்டவர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் சீன நாட்டவர் கைது

by newsteam
0 comments
சட்டவிரோத மதுபானத்துடன் சீன நாட்டவர் கைது

வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் சட்டவிரோத மதுபானம் தயாரித்து வந்த சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீன நாட்டவரிடமிருந்து 318,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபரான சீன நாட்டவர் தாமரை கோபுர திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!