Wednesday, February 26, 2025
Homeஇலங்கைமது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த மதகுரு கைது

மது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த மதகுரு கைது

வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (30) தெரிவித்தனர்.வவுனியா, புகையிரத நிலைய வீதியில் மது போதையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சென்ற இந்து மதகுரு ஒருவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், அருகில் இருந்த தொலைகாட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக் காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் வீதியில் சென்றோர் குறித்த மதகுருவை மடக்கிப்பிடித்து வைத்திருந்ததுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இந்து மதகுவை கைது செய்ததுடன், வவுனியா பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின் நேற்று (30) பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!