Tuesday, February 18, 2025
Homeஇலங்கைவாழைச்சேனையில் சகோதரனை குத்திக் கொன்ற சகோதரன் தலைமறைவு

வாழைச்சேனையில் சகோதரனை குத்திக் கொன்ற சகோதரன் தலைமறைவு

கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.இதில், தம்பிக்காரன் தனது 43 வயதுடைய சகோதரனை குத்திக் கொலை செய்துள்ளார். கத்திக் குத்துக்கு இலக்கான நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சகோதரனை குத்திக் கொன்ற சகோதரன் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் படியுங்கள்:  இரவு நேர விருந்துகளில் 10 மணி வரை மாத்திரம் வானொலி உபகரணங்களை பயன்படுத்தலாம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!