Home » உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

by newsteam
0 comments
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (01) இரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.உள்ளூராட்சி தேர்தலில் கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கொண்டு சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீபன் ஆகியோருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்கள் வருவதான சுரேஷ் பிரேமச்சந்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்துரையாடினர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!