Friday, August 8, 2025
Homeஉலகம்சீனாவில் தொங்குபாலம் இடிந்து விழுந்தது – 5 பேர் உயிரிழப்பு,24 பேர் படுகாயம்

சீனாவில் தொங்குபாலம் இடிந்து விழுந்தது – 5 பேர் உயிரிழப்பு,24 பேர் படுகாயம்

சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஏறி நின்று இயற்கை அழகை ரசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று சுற்றுலா பயணிகள் பலர் அங்கு சென்றிருந்தனர்.அப்போது அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர். மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் பலியானோருக்கு சீன அதிபர் ஜின்பிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த பாலம் அறுந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  பேருந்தும், லொறியும் மோதி கோர விபத்து
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!