Monday, June 9, 2025
Homeஇலங்கைசெம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர், கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விண்ணப்பம் செய்யுமாறு நீதவான் தெரிவித்துள்ளார். செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் சனிக்கிழமை (07) வரையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்நிலையில் செம்மணி புதைகுழி தொடர்பாக வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர் , கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக உரிய முறையில் நீதிமன்றை நாடி , அதற்கான அனுமதிகளை பெற முடியுமாம் என நீதவான் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:  மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!