Home » தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

by newsteam
0 comments
தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை – வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கல்லூரி விடுதியில் வைத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!