Saturday, August 2, 2025
Homeஇலங்கைமனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்த செம்மணி புதைகுழி அகழ்வு - சிவஞானம் சிறிதரன்

மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்த செம்மணி புதைகுழி அகழ்வு – சிவஞானம் சிறிதரன்

இன்று காலை (01) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் நீதவானின் அனுமதியுடன் பார்வையிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “செம்மணி புதைகுழி அகழ்வு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதிகளை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்தப் பணி, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சர்வதேச தரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். 1998ஆம் ஆண்டு முதல் இந்தப் புதைகுழி பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டு வந்துள்ள நிலையில், இப்போது நீதியை நிலைநாட்டுவதற்கு இது ஒரு திருப்புமுனையாக அமையும். காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அகழ்வு முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்,” என்றார்.மேலும், இந்த அகழ்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இதற்கு உலகளாவிய ஆதரவு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். இப்பணி, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:  முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களின் பெறுமதியை அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!