முப்படைகளில் இருந்து தப்பியோடிய வீரர்கள் உட்பட மொத்தம் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்டவர்களில் 2,261 இராணுவ வீரர்கள், 194 கடற்படை வீரர்கள் மற்றும் 198 விமானப்படை வீரர்கள் அடங்குவர்.இதே காலப்பகுதியில் பொலிஸார் மேலும் 330 பேரைக் கைது செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.