ஹட்டன் பிரதான நகரில் காலணி விற்பனை கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை (18) ஏற்பட்டுள்ளது.கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது, மேலும் ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புத் பிரிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தண்ணீரை பீய்ச்சி செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது எனவும் சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.மேலும் தீ விபத்து சிறிது நேரம் குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது எனவே காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் சிரமப்பட்டனர் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.