வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தன்னை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து வலய கல்வி அலுவலகம் முன் சாத்வீக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். மேலும், பெற்றோரின் சம்மத கடிதமும் பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் குறித்த மாணவனை மட்டும் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் விட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.