அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கும்இ சகோதரனுக்கும் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் – மஹவிலச்சி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவரும் சகோதரனும் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த பெண் தனது கணவரையும் சகோதரனையும் சந்திப்பதற்காக உணவு பொதியுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.இதன் போது சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.