Home » அமெரிக்க வர்த்தகத்தில் புதிய பதற்றம்

அமெரிக்க வர்த்தகத்தில் புதிய பதற்றம்

by newsteam
0 comments
அமெரிக்க வர்த்தகத்தில் புதிய பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக 104% சுங்க வரியை உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.இந்த உத்தரவு, இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.டிரம்ப் நிர்வாகம், சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் நோக்கில் இந்த “பரஸ்பர சுங்க வரி” கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.சீனா, அமெரிக்காவின் முந்தைய சுங்க வரி உயர்வுக்கு பதிலடியாக 34% கூடுதல் வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

“சீனா அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது. நாம் தாக்கப்பட்டால், அதை விட வலுவாக பதிலடி கொடுப்போம்,” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.டிரம்ப், தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில், “சீனா முதலில் அழைக்க வேண்டும். அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லை,” என்று பதிவிட்டிருந்தார். மேலும், சீனா தனது பதிலடி வரிகளை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்த 104% சுங்க வரி, ஏற்கனவே அமலில் உள்ள 20% மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 34% வரிகளுடன் சேர்ந்து, சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். இதனால், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் கடுமையான பாதிப்பை சந்திக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அதேநேரம், அமெரிக்காவில் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் பங்குச் சந்தை சரிவு போன்றவை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே, டிரம்பின் சுங்க வரி அறிவிப்புகளால் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகின்றன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!