Monday, June 2, 2025
Homeஇந்தியாஇந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தியது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதுபோல் பல கோடி பேர் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியா உள்பட பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கர்நாடகம், தமிழ்நாடு, மராட்டியம், கேரளா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் மட்டும் 685 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் கேரளாவில் 1,336 பேரும், மராட்டியத்தில் 467 பேரும், டெல்லியில் 375 பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகாவில் பேரும் 234, மேற்கு வங்காளத்தில் 205 பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், மற்றும் உத்தரபிரதேசத்தில் 117 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  மது குடிப்பதை கண்டித்த கணவனின் மர்ம உறுப்பை வெட்டி கொலை செய்த மனைவி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!