அரசாங்க அச்சகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த நிலைமைக்கு காரணமென தெரியவருகிறது.
உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ஊழியர், அச்சகத்திற்குத் திரும்பியபோது பாதுகாப்பு உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூர்மையான ஆயுதத்தால் ஊழியரைத் தாக்க முயன்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார்.