Wednesday, April 2, 2025
Homeஇலங்கைகட்டைக்காடு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

கட்டைக்காடு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் இருவர் இன்று (1) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று(1) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த இரண்டு படகுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  பாராளுமன்றில் 2000/- உயர்ந்த உணவு விலை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!