காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றம் கோரியே தாம் கடிதம் அனுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க விலகியுள்ளதாகவும், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையிலேயே, காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.