இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி பயஸ் ரசாக் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது, வழக்கின் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது சம்பந்தமாகப் பிரச்சினை எழுந்த போது அது குறித்து தீர்மானிப்பதற்காக வழக்கினை 4 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.