Sunday, February 23, 2025
Homeஇலங்கைமனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை பொல்லால் தாக்கிக் கொன்ற மருமகன் கைது

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை பொல்லால் தாக்கிக் கொன்ற மருமகன் கைது

மகளை தாக்கிய மருமகனின் செயலை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழந்ததையடுத்து, மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இன்று பகல் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மருமகன் மகளை தாக்கியதை தந்தை கண்டுள்ளார்.

அவ்வேளை தனது மருமகனின் செயலை கண்டித்தவரின் தலையில் மருமகன் பொல்லால் அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த தந்தை கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 600,000 வெள்ள நிவாரண உதவிகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!