Monday, March 3, 2025
Homeஇலங்கையாழ் மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு லஷ்மிகா அறக்கட்டளையால் உதவித் தொகை வழங்கிவைப்பு

யாழ் மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு லஷ்மிகா அறக்கட்டளையால் உதவித் தொகை வழங்கிவைப்பு

யாழில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் யாழ். மாநகர சபை வரி அறவிட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனுக்கு இன்று(03) ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது.லஷ்மிகா அறக்கட்டளையின் நிறுவுனர் தர்மிகா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகையை வடமராட்சி கிழக்கு சமூக மாற்றத்திற்கான ஊடகமையம் ஊடாக இன்று வழங்கிவைத்தார்.சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்து இளைஞனிடம் உதவித் தொகையை கையளித்த ஊடகமைய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.த காண்டிபன் கருத்து தெரிவிக்கையில்,லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனருக்கு நன்றி தெரிவிப்பதுடன் மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டு, அவர்களது மனித உரிமைகளும் மதிக்கப்பட்டு சமூக மாற்றம் ஒன்றை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டுமென தெரிவித்தார்.
யாழ் மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு லஷ்மிகா அறக்கட்டளையால் உதவித் தொகை வழங்கிவைப்பு

இதையும் படியுங்கள்:  இந்திய ஜனாதிபதியின் அரச விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுரவின் உரை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!