யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாய் பகுதியில் இன்று (23)காலை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வுத்துறையும் மருதங்கேணி போலீசாரும் இணைந்து சுற்றி வளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.இதில் 40 கேர்ளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.