Thursday, March 27, 2025
Homeஇலங்கைவிபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசேட விசாரணை

விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசேட விசாரணை

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானமை குறித்து விசாரணை நடத்துவதற்காக, விமானப்படைத் தளபதியால் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவால் 7 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழு இதற்காக நியமிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.ஶ்ரீலங்கா விமானப்படையின் கட்டுநாயக்க முதன்மை முகாமில் உள்ள விமானப்படை இலக்கம் 05 தாக்குதல் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 வகை விமானம் ஒன்று, இன்று (21) காலை பயிற்சியின் போது வாரியபொல, பாதெனிய பகுதியில் திடீர் விபத்துக்கு உள்ளானது.எனினும், அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறி, குருநாகல் பாதெனிய மினுவன்கெடே கல்லூரி வளாகத்தில் பாராசூட் மூலம் தரையிறங்கினர்.இந்த விமானத்தில் பிரதான பயிற்சி ஆலோசக விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகியோர் பயணித்திருந்தனர்.
அந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை முகாமிலிருந்து காலை 7:27 மணியளவில் புறப்பட்டதாகவும், காலை 7:55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு வௌியான தகவல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!