குருநகர் பகுதியிலிருந்து கடந்த 15ம் திகதி தொழிலுக்கு சென்ற மீனவர்கள் தமிழக கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் குருநகர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் சக மீனவர்கள் தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில் தமிழக காவல் படையினரால் குறித்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இராமநாதபுரம் தொண்டி மீன்பிடிதுறைமுகத்திற்கு அண்மையில் படகொன்று தத்தளித்ததை அவதானித்த காவல் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்தனர்.இவர்களை தேடும் பணியில் குருநகர் மீனவர்கள் கடற்படை தீவிரமாக களமிறங்கியமை குறிப்பிடதக்கது.இருப்பினும் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறைவாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்மந்தப்பட்ட கடற்தொழில் அமைச்சு இரண்டு மீனவர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு விரைவாக அவர்களை மீட்குமாறு சக மீனவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்