2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கெலிஓய பிரதேசத்தின் காதி நீதிமன்ற நீதிபதியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விவாகரத்து வழக்கில் தீர்ப்பை விரைவாக வழங்குவதற்காக இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 21ஆம் கைது செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.