Home » உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைய பகிரங்கமாக அழைப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைய பகிரங்கமாக அழைப்பு

by newsteam
0 comments
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைய பகிரங்கமாக அழைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு, யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தனது கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு படிவமொன்றையும் வெளியிட்டுள்ளார்.குறித்த படிவத்தை நிரப்பி அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட விரும்பினால் தனது கட்சியில் இணைந்து கொண்டு போட்டியிட முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!