Tuesday, April 29, 2025
Homeஇலங்கைஐ.நா. வெசாக் தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை மியன்மாரின் ஹோ சி மின் நகரில் நடைபெறுகின்றது.85 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 700 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை, இந்தியா, கம்போடியா, நேபாளம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஐ.நா. வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  சட்டவிரோத சிகரெட் தொகையுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!