Saturday, July 19, 2025
Homeஇலங்கைகிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி - இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி – இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி (Leptospirosis) பக்றிரீயா என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.இன்று (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்றிரீயாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது.இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 18-06-2025
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!