Monday, September 15, 2025
Homeஉலகம்கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு – கிம் யோ ஜாங் எச்சரிக்கை

கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு – கிம் யோ ஜாங் எச்சரிக்கை

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அப்போது அவர், “இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்றார்.

இதையும் படியுங்கள்:  உயர்தர பரீட்சையில் மன்னாரில் பொறியியல் தொழில்நுட்பதுறையில் முதலிடம் பிடித்த மாணவன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!