Home » சம்மாந்துறையில் 45,000 ரூபா மதிப்புள்ள பொருள் ஆர்டர் – பணம் செலுத்தாமல் தப்பிய இளைஞன் கைது

சம்மாந்துறையில் 45,000 ரூபா மதிப்புள்ள பொருள் ஆர்டர் – பணம் செலுத்தாமல் தப்பிய இளைஞன் கைது

by newsteam
0 comments
சம்மாந்துறையில் 45,000 ரூபா மதிப்புள்ள பொருள் ஆர்டர் – பணம் செலுத்தாமல் தப்பிய இளைஞன் கைது

சம்மாந்துறையில் ஆன்லைன் ஊடாக 45,000 ரூபா பெறுமதியான பொருளை ஆர்டர் செய்து அதற்கான பணத்தினை வழங்காமல் தப்பியோடி இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.இளைஞன் ஒருவர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆன்லைன் ஊடாக ஆர்டர் செய்யப்பட்ட பொருளுக்கு பணம் வழங்காமல் தப்பியோடி உள்ளார் என்று புதன்கிழமை (20) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் மேற்பார்வையில், பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை நேற்று வியாழக்கிழமை (21) கைதுசெய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஆன்லைன் ஊடாக ஆர்டர் செய்யப்பட்டு பணம் வழங்காமல் கொண்டு சென்ற பொருளையும் சம்மாந்துறை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று வெள்ளிக்கிழமை (22) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!