Home » சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

by newsteam
0 comments
சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட 28 வயது குடும்ப பெண் ஒருவரை நேற்று (24) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தரின் வழக்கு நேற்று வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணைக்காக வருகை தந்த அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து குறித்த குடும்பஸ்தரை சிறைச்சாலை கொண்டு சென்ற போது அவருடன் உரையாடி பொதி ஒன்றை வழங்கியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அப்பொதியில் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. பொலிஸாரால் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!