Home » சீனாவில் 35 பேரை கொன்ற முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் 35 பேரை கொன்ற முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

by newsteam
0 comments
சீனாவில் 35 பேரை கொன்ற முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் பென் வெய்கியு (வயது 62). இவர் கடந்த நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் உள்ள ஒரு மைதானம் அருகே காரில் சென்றார். அந்த நேரத்தில் மைதானம் அருகே ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த விபத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் வெய்கியுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை கோர்ட்டு தற்போது நிறைவேற்றி உள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!