Wednesday, June 25, 2025
Homeஇலங்கைசெம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "அணையா விளக்கு" தொடர் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா விளக்கு” தொடர் போராட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா விளக்கு” தொடர் போராட்டம் இன்றைய தினம் (24) இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இப்போராட்டம் ஆரம்பமானது.நேற்று மாலை செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினமும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.போராட்டத்தில் ஏற்றப்பட்டுள்ள அணையா விளக்குக்கான எண்ணெய், மலர் அஞ்சலி செலுத்துவதற்கான மலர்கள் என்பவற்றை தந்து உதவுமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!