ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (5) யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தாவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.