குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.