Home » தெஹிவளையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தெஹிவளையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

by newsteam
0 comments
தெஹிவளையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தெஹிவளை- பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை மாநகர சபை தெரிவித்துள்ளது.குறித்த தீ விபத்தானது நேற்று (18) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீ விபத்தின் போது ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் இணைந்து இன்று புதன்கிழமை (19) அதிகாலை 05.00 மணியளவில் தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!