Thursday, April 17, 2025
Homeஇலங்கைநாட்டின் பல பகுதிகளில் மழை - வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மழை – வெளியான அறிவிப்பு

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மற்ற இடங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமத்திய,கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது (30-40) கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:  பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றல் : வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!