Thursday, September 18, 2025
Homeஇலங்கைநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம்மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  யாழ் மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு லஷ்மிகா அறக்கட்டளையால் உதவித் தொகை வழங்கிவைப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!