Friday, August 1, 2025
Homeஇலங்கைநாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

நாட்டில் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இரத்தினபுரி, குருணாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.எலிக்காய்ச்சல் என்பது எலியின் சிறுநீர், சளி சுரப்புகளின் வழியாக மனிதர்களிடையே பரவும் ஒரு பாக்டீரியா தொற்றாகும்.வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மற்றும் அசுத்தமான இடங்களில் உள்ள நீர், உணவுகளை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் - வௌிப்படுத்திய பதில் பொலிஸ்மா அதிபர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!