Thursday, April 17, 2025
Homeஇலங்கைநிராகரிக்கப்பட்ட மேலும் சில வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நிராகரிக்கப்பட்ட மேலும் சில வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.அதன்படி, நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் குறித்த உத்தரவுகளை பிறப்பித்தது.

இதையும் படியுங்கள்:  எலிக்காய்ச்சல் நோய் காரணமாக 99 பேர் பாதிப்பு!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!