Saturday, June 7, 2025
Homeஇலங்கைநுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இதில் ஒரு சிறுவர், ஒரு பெண் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் அடங்குவதாக இராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!