Sunday, June 1, 2025
Homeவிளையாட்டு செய்திபங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.வழக்கு ஒன்றில் ஷகிப் அல் ஹசன் ஆஜராகாமையினால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.3 இலட்சம் டாலர் மதிப்பிலான வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த டிசம்பர் மாதம் ஷகிப் அல் ஹசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 19ஆம் திகதிக்குள் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உத்தரவுக்கு அமைய ஆஜராகாததால், ஷகிப் அல் ஹசனுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!