இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் இன்று (19) விஜயம் செய்தார்.இதன் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை கௌரவித்ததுடன் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வில், பள்ளிவாசல் நிருவாகத்தினர், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.