Home » பாடசாலை மாணவிகளில் அதிகரிக்கும் கர்ப்பம்: பெற்றோர்,ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு தேவை

பாடசாலை மாணவிகளில் அதிகரிக்கும் கர்ப்பம்: பெற்றோர்,ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு தேவை

by newsteam
0 comments
பாடசாலை மாணவிகளில் அதிகரிக்கும் கர்ப்பம்: பெற்றோர்,ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு தேவை

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை தருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!