Home » பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 33 பேர் கைது

பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 33 பேர் கைது

by newsteam
0 comments
பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 33 பேர் கைது

பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ஆறு விபச்சார விடுதிகளிலிருந்து 22 பெண்கள் உட்பட 33 பேர் நேற்று புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.தலங்கம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மூவரும், சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவரும், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும், 1,425 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்த போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!