Home » புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

by newsteam
0 comments
புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து 10 பேர் சந்தேகத்தின் பேரில் செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிசாரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!