Home » பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை-பெங்களூரில் அதிர்ச்சி

பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை-பெங்களூரில் அதிர்ச்சி

by newsteam
0 comments
பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. பெங்களூரில் அதிர்ச்சி

கர்நாடக தலைநகர்பெங்களூரில் பேருந்திற்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள குடோன் தெருவுக்கு அருகில் நடந்தது.பாதிக்கப்பட்ட பெண் யெலஹங்கா பகுதிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அந்த பெண், இருவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து வருமா என்று கேட்டுள்ளார்.பெண்ணின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த இரு ஆண்களும் உதவி செய்பவர்களைப் போல் கட்டிக்கொண்டு பேருந்து எங்கு நிற்கும் என்று தங்களுக்குத் தெரியும் என்று கூறி பெண்ணை குடோன் தெருவுக்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருவதாக இன்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!