Wednesday, August 6, 2025
Homeஇலங்கைபொலிஸ்மா அதிபர் பதவி நீக்கம் தொடர்பான முன்மொழிவு ஜனாதிபதியிடம்

பொலிஸ்மா அதிபர் பதவி நீக்கம் தொடர்பான முன்மொழிவு ஜனாதிபதியிடம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீது நேற்று (06) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 பேரும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்ததது.இந்நிலையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானம் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதன் பின்னர் ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான புதியவரின் பெயரை பரிந்துரைப்பார்.

இதையும் படியுங்கள்:  செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 11 என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு – மொத்தமாக 101 ஆக உயர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!